mardi 11 juin 2013


  இலங்கையர் ஒருமைப்பாட்டு மையத்தின் நிகழ்ச்சி பற்றிய முன் அறிவுப்பு

 "வெலிக்கடைச் சிறைப் படுகொலையின்                                     30வது ஆண்டு நினைவு"

 இலங்கையர் ஒருமைப்பாட்டு மையம் வெலிக்கடைச்  சிறைப் படுகொலையின் 30வது ஆண்டு நினைவை யொட்டிய  நிகழ்வை எதிர்வரும் யூலை மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று பாரிஸில் நிகழ்த்த உள்ளது.

 இந்நிகழ்வில் வெலிக்கடைச்  சிறைப் படுகொலையின்  நினைவுகள், அரசியற் காரணங்களால் விசாரணை  இன்றி  சிறை வைக்கப்பட்டிருப்பவர்களின் நிலமைகள், மற்றும்  இன்றைய  இலங்கை அரசியல் குறித்த உரைகளும் இடம்பெறவுள்ளன.

 நிகழ்ச்சி நிரல் பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
தொடர்புகளுக்கு :
10 rue Labat, 75018 Paris / Tél: +33 (0) 7 51 41 33 05 / centre.solidarite.srilankais@gmail.com
facebook :
Centre De Solidarite Des Srilankais
http://srilankais.blogspot.fr


mardi 28 mai 2013

01 may 2013 மேதின ஊர்வலம் !


வெலிக்கடைச்சிறைப் படுகொலையின் 30வது ஆண்டு நினைவுக்கான ஆவணசேகரிப்பு !

கடந்த 1983 யூலை மாதம் 25ம்; 27ம் திகதிகளில் வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலையின் 30வது ஆண்டு நினைவையொட்டி,படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஆவணச் சேகரிப்பு ஒன்றினை மேற்கொள் வதற்கான  முயற்சியில் இலங்கையர் ஓருமைப்பாட்டு மையம் ஈடுபட்டுள்ளது
 அன்று படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான குறிப்புகள்; கடிதங்கள்; புகைப்படங்கள் மற்றும் சாட்சியங்களாக இருக்கும் நபர்கள் போன்ற விபரங்களைத் தந்துதவுமாறும் .அத்துடன் தற்போது அரசியற் காரணங்களால் சிறை வைக்கப்பட்டிருப்பவர்கள் பற்றிய தெரிந்த விபரங்களையும் தந்துதவுமாறு சார்ந்தவர்களின் உறவினர்கள் நண்பர்கள் சமூகஆவலர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
இதனை ஒரு பொதுப் பணியாகக் கருத்தில் எடுத்து அனைவரும் தங்களால் இயன்ற ஒத்துழைப்பினை வழங்குவதுடன் இத்தகவலை அனைவருக்கும் பகிர்ந்துகொள்ளவும்
. இலங்கையர் ஒருமைப்பாட்டு மையம்
தொடர்பு
     centre.solidarite.srilankais@gmail.com      tel:- (33) 07 51 41 33 05.
Facebook :   CENTRE  DE  SOLIDARITE  DES  SRILANKAIS